சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம்

சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.

     சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே அப்பரடிகள் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். ஒருமுறை திருப்புகலூரில் அப்பரடிகள் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமான் அவரைச் சோதிப்பதற்காக, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் அவர் கண்ணில் படும்படியாக இருக்கச் செய்தாராம். ஆனால் அப்பருடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் சிவமயமாகவே இருந்ததால், பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து அங்கிருந்த பொய்கையிலே எறிந்தாராம். அத்தகைய மனப்பக்குவத்தை அவர் அடைந்திருந்தார். இன்றைக்கு அப்பர் காட்டிய நெறியைப் பின்பற்றி எத்தனையோ உழவாரப்பணி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ் உழவாரப் பணியை – இச்சிவபுண்ணியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிட்டும் தெரியுமா? 21 தலைமுறைகள் தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், பிற வகைகளாலும் (பொருள் கொடுத்து உதவி) ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு அப்பரடிகளின் உழவாரத்தை நாமும் கைக்கொண்டு வாழ்வோம்.

திருச்சிற்றம்பலம்


சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம் – நடைபெற்ற உழவாரக் கோயில்கள்

9 வது உழவாரம் – 04.04.2021
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அரக்கோணம், மோசூர் கிராமம்

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 9வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


8 வது உழவாரம் – 07.03.2021
அருள்மிகு கமலேஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமம்

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 8வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 23 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


7 வது உழவாரம் – 07.02.2021
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் ஒரத்தூர் ரோடு, சிறுவஞ்சூர் கிராாமம்

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 7வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 27 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


6 வது உழவாரம் – 10.01.2021
அருள்மிகு பச்சைமலை சித்தர்கள் வாழும் சிவன் கோவில் குரோம்பேட்டை, சென்னை

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 6வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 27 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


5 வது உழவாரம் – 03.01.2021
அருள்மிகு வியாக்ரபுரிஸ்வரர் திருக்கோயில், செங்கல்கட்டு, புலிப்பாக்கம்

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 5வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


4 வது உழவாரம் – 06.12.2020
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருத்தணி, கிருஷ்ணசமுத்திரம்,

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 4வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


3 வது உழவாரம் – 01.11.2020
அருள்மிகு சக்திபுரிஸ்வரர் திருக்கோயில், மேடவாக்கம், பொன்மார்

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 4வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


2 வது உழவாரம் – 04.10.2020
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி, பொன்னேரி

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 2வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


1 வது உழவாரம் – 16.08.2020
அருள்மிகு சக்தி விநயாகர் திருக்கோயில் எழும்பூர்,சென்னை.

நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின் 1வது உழவாரம். இந்த உழவாரத்தில் சுமார் 25 அடியார்கள்  கலந்து கொண்டார்கள்.


திருச்சிற்றம்பலம்