சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.23 திருவானைக்கா
பண் – இந்தளம்
241
மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 01
242
கொலையார் கரியின் னுரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 02
243
காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 03
244
சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமெனா யிழையே. 04
245
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 05
246
குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
247
மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 08
248
திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே. 09
249
புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 10
250
வெண்நா வலமர்ந் துறைவே தியனை
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 11
திருச்சிற்றம்பலம்