முனையடுவார்நாயனார்

நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார்.

அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால் வந்து வேண்டி நின்றால் நடுவு நிலையுடன் பொருள் பெற்று அவர்பால் பகைவரை எதிர்த்து வெற்று பெறுவார். அந்த பொருளைக் கொண்டு அடியார்க்கு உதவிகள் செய்து தொண்டு புரிந்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து சிவதொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்