முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்

உயிர்களிடத்து எக்காலத்திலும் அன்பு கொண்டவராகிய சிவபெருமானைச் சிவ ஆகம விதிமுறைகள் தவறாத வண்ணம் ஆசையும், அன்பும் பெருக, காலை, நண்பகல், மாலை என மூன்று காலத்திலும் அர்ச்சனை செய்பவர்கள். ஆதி சைவ முனிவர்கள் ஆவார்கள். முன் கூறிய மூன்று காலத்திலும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆக மூன்றாகப் பகுக்கப்படும் எக்காலத்திலும் வழிவழியாக அர்ச்சனை செய்யும் திருத்தொண்டானது சிவ வேதியர்களுக்கெ உரியதாகும். சிவாலயத்தில் விதிமுறைப்படி பூசை செய்யும் சிவாச்சாரியார்களே முப்போதும் திருமேனி தீண்டுவார் எனப்படுவர். இவர்கள் அதிகாலையில் நீரில் மூழ்கி நீராடுவர். திருநீறு பூசிக் கொள்வர். சந்தியா வந்தனம் செய்வர். சிவலிங்கம் முதலான திருமேனிகளை முப்போதும் தீண்டி பூசை புரிவர். இவர்களே முப்போதும் திருமேனி தீண்டுவார் ஆவர்.

திருச்சிற்றம்பலம்