சிவசமயம்

அறுபத்து மூவர்

தத்துமூ தெயில் மூன்றும் தழலெழ
முத்து மூரல் முகிழ்ந்த நிராமய
சித்து மூர்த்திதன் தாளிணை சேர்அறு
பத்துமூவர் பதமலர் போற்று வாம்.

பேயன்ன புறச்சமயப் பிணக்குநூல்
வழியனைத்தும் பிழையே யன்றி
வாயன்மை தெளிந்துசைவ சிந்தாந்த
வழிதெறி அதீத வாழ்விற்
போயண்மி அஞ்செழுத்தும் திருநீறும்
கண்டிகையும் பொருளாகக் கொண்ட
நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும்
பெரும்பெறு நான்பெற் றேனால். – காஞ்சிபுராணம்.

உலகத்தில் உள்ள எல்லாச் சமங்களிலும் உள்ள பொது உண்மைகளையும், சிறப்பொழுக்கங்களையும், சைவசமயம் தன்னிடத்தே ஏணிப்படிகள் போலக் கொண்டு அவற்றிற்கு மேம்பட்ட அதீத நிலையிலிருக்கிறது. இதனால் சைவத்தின் மேற்சமயம் வேறிலை என்றும் சைவ சமயமே சமயம் என்றும் பெரியோர்கள் இதனை பாராட்டியுள்ளார்கள். இவ்வதீத வாழ்க்கையை நடத்திச் சைவத்தின் பெருமையை நிலைநாட்டியவர்களே அறுபத்துமூவர்.

இவர்களுடைய திருமேனிகளைத் திருக்கோயில்களில் வைத்து வழிபடுவதன் முக்கிய நோக்கம் இவர்களுடைய வாழ்க்கையை நினைவில் வைத்து இவர்களைப் போலவே நாமும் இயன்ற வரையில் நடக்க வேண்டும் என்பதே. இதற்காகவே திருக்கோயில்களில் இவர்கள் எழுந்தருளுகின்றனர்.

அறுபத்துமூவர் பல்வேறு நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆதிசைவர் முதல் ஆதிதிராவிடர் ஈறாகக் கூறப்படும் பல குலங்களில் தோன்றிச் சிவபெருமானிடத்திலும் சிவனடியார்களிடத்திலும் அளவு கடந்த அன்புடையராக வாழ்ந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் இல்லறம் நடத்தியவர்கள். சிலர் இளைஞர் மூவர் பெண்மணிகள். இவர்கள் தாம் பூசுகின்ற திருநீற்றைப் போலவே கள்ளங்கடமற்ற வெண்மையான பரிசுத்த உள்ளம் உடையவர்கள். தாம் அணிக்கின்ற உருத்திராக்கம் நினைவூட்டுகின்ற இரக்கம் மிகுதியுடைய ஈர அன்பினர். பூகம்பம் போன்ற எவ்விதமான பெருந் துன்பத்துக்கும் அஞ்சாததீரர்கள். செல்வ நிலையில் மட்டும் கடவுளை நிந்திக்கும் மூடர்களைப் போலன்றி எப்போதும் கலங்காத மனம் உடையவர்கள். நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் துயின்றாலும் விழித்தாலும் எக்காலத்தும் கடவுளை மறவாதவர்கள். அரனையும் அடியவரையும் பணிந்துருகிப் பேசின வாய் தழுதழுப்பக் கண்ணீர் வெள்ளம் பாய, மயிர்சிலிப்பக் கூசியே உடல் தம்பித்திடும் பக்தசிகாமணிகள், தமக்கென விரும்பி வீடு பேற்றையும் வேண்டிக் கேட்காத தம்முனைப்பற்ற வீரர்கள்.

63 நாயன்மார்கள் :-

1. அதிபத்தர்

2. அப்பூதியடிகள்

3. அமர்நீதி நாயனார்

4. அரிவட்டாயர்

5. ஆனாய நாயனார்

6. இசைஞானியார்

7. இடங்கழி நாயனார்

8. இயற்பகை நாயனார்

9. இளையான்குடிமாறார்

10. உருத்திர பசுபதி நாயனார்

11. எறிபத்த நாயனார்

12. ஏயர்கோன் கலிகாமர்

13. ஏனாதி நாதர்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணநாதர்

16. கணம்புல்லர்

17. கண்ணப்பர்

18. கலிய நாயனார்

19. கழறிற்ற்றிவார்

20. கழற்சிங்கர்

21. காரி நாயனார்

22. காரைக்கால் அம்மையார்

23. குங்கிலியகலையனார்

24. குலச்சிறையார்

25. கூற்றுவர்

26. கலிக்கம்ப நாயனார்

27. கோச் செங்கட் சோழன்

28. கோட்புலி நாயனார்

29. சடைய நாயனார்

30. சண்டேஸ்வர நாயனார்

31. சத்தி நாயனார்

32. சாக்கியர்

33. சிறப்புலி நாயனார்

34. சிறுத்தொண்டர்

35. சுந்தரமூர்த்தி நாயனார்

36. செருத்துணை நாயனார்

37. சோமசிமாறர்

38. தண்டியடிகள்

39. திருக்குறிப்புத் தொண்டர்

40. திருஞானசம்பந்தமூர்த்தி

41. திருநாவுக்கரசர்

42. திருநாளைப் போவார்

43. திருநீலகண்டர்

44. திருநீலகண்ட யாழ்ப்பாணர்

45. திருநீலநக்க நாயனார்

46. திருமூலர் இடையர்

47. நமிநந்தியடிகள்

48. நரசிங்க முனையர்

49. நின்றசீர் நெடுமாறன்

50. நேச நாயனார்

51. புகழ்சோழன்

52. புகழ்த்துணை நாயனார்

53. பூசலார் அந்தணர்

54. பெருமிழலைக் குறும்பர்

55. மங்கையர்க்கரசியார்

56. மானக்கஞ்சாற நாயனார்

57. முருக நாயனார்

58. முனையடுவார் நாயனார்

59. மூர்க்க நாயனார்

60. மூர்த்தி நாயனார்

61. மெய்ப்பொருள் நாயனார்

62. வாயிலார் நாயனார்

63. விறன்மிண்ட நாயனார்

9 தொகையடியார்கள் :-

1.தில்லைவாழ் அந்தணர்:

தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்.

2.பொய்யடிமை இல்லாத புலவர்:

சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

3.பத்தராய்ப் பணிவார்:

திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதல் கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

4.பரமனையே பாடுவார்:

சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள். பிற தெய்வத்தை பாடாதவர்கள்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்:

சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.

6.திருவாரூர்ப் பிறந்தார்:

திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்:

மூன்று காலங்களில் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

8.முழுநீறு பூசிய முனிவர்:

உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்கள்.

9.அப்பாலும் அடிசார்ந்தார்:

முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.