சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.36 திருப்பைஞ்ஞீலி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் தேவியார் – விசாலாட்சியம்மை


பண் – கொல்லி

361
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபர விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.1

362
சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல் வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற் பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும் மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே. 7.36.2

363
தூயவர்கண்ணும் வாயும்மேனியுந் துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும் பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே. 7.36.3

364
செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் அரவமுன்கையில் ஆடவே
வந்துநிற்குமி தென்கொலோபலி மாற்றமாட்டோ ம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள் கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.4

365
நீறுநுந்திரு மேனிநித்திலம் நீணெடுங்கண்ணி னாளொடுங்
கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந் திடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்டலை கையிலேந்திபைஞ் ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.5

366
குரவம்நாறிய குழலினார்வளை கொள்வதேதொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே நடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினை பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.6

367
ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர் என்பெலாமணிந் தென்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையது காதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.7

368
மத்தமாமலர் கொன்றைவன்னியுங் கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ் ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.8

369
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9

370
கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர் வேதமோதுதிர் கீதமும்
பையவேவிடங் காகநின்றுபைஞ் ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.10

371
அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர் வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன் றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமை கேள்வன்சேவடி சேர்வரே. 7.36.11

திருச்சிற்றம்பலம்