37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்

37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்

37வது உழவாரப் பணி

அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில்

தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.

அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில்

தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தர்மாபுரம் என்னும் கிராமம். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் குந்தீசுவரர், தன்னுடைய மைந்தர்களாகிய பஞ்சபாண்டவர்கள் வனவாச வாழ்க்கை மேற்கொண்ட தருணத்தில் அவர்கள் நல்லபடியாக திரும்பி நாட்டிற்கு வரவும் லட்சியத்தை அடையவும் இத்தல இறைவனை வேண்டி குந்திதேவி பூஜித்து வழிபட்டதாக கர்ணபரம்பரை வரலாறு கூறுகின்றது. அதனால் இத்தலம் குந்தீசுவரம் என சிறப்பித்து அழைக்கப்படுகின்றது.

மேலும் இக்கிராமத்தைச் சுற்றி உள்ள பெயர்களும் மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளனவாக உள்ளன. சான்றாக இவ்வூருக்கு அருகில் உள்ள திருவாதூரில் தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயிலும் சின்ன வெண்மணியில் பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் கோயிலும் பெரிய வெண்மணியில் அர்ச்சுனன் வழிபட்ட விஜயேஸ்வரர் கோயிலும் நாகமலையில் நகுலன் வழிபட்ட நகுலேஸ்வரர் கோயிலும் தேவனூரில் சகாதேவன் வழிபட்ட சகாதேவேஸ்வரர் கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயல்கள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் தர்மாபுரம் குந்தீஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் வேதநாயகி. ஒரு சிவாலயத்திற்கு தேவையான அனைத்து சந்நிதிகளும், கோஷ்ட தெய்வங்களும் அமையப் பெற்று விழாக்கோலங்கள் பூண்ட ஆலயம் இது. மேற்கொண்ட தகவல்களை கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். மற்றபடி, பெரிய அளவில் திருப்பணிகள் நடந்தேறி நிச்சயம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ஆலயத்தில் கோயில் மண்டபம் கருவறை, கருவறை விமானம், கிணறு என்று எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்காமல் செடிகள், மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. சிவன் கோயில் கருவறை விமானம் தடித்த அரசமர வேர்களால் சூழப்பட்டு பழுதடைந்துள்ளது.

வெகு விரைவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ள வேண்டிய தருணத்தை ஆலயம் எதிர்நோக்கியுள்ளது. இந்த காலகட்டத்திலும் ஒரு காலபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமான விசேஷ நாள்கள் கொண்டாடப்படுகின்றது. பாலாலயம் நடந்தேறி பத்து வருடங்கள் ஆகிவிட்டதாக அறியப்படுகின்றது. மதுராந்தகம் – பவுஞ்சூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ள வெளிக்காடு என்னுமிடத்திலிருந்து சுமார் கி.மீ. தொலைவில் உள்ளது தர்மாபுரம். மதுராந்தகத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளது.

தொடர்புக்கு: 94439 03047.

Google Map : https://goo.gl/maps/5Ks5cFxEdV9gCa898

————————————————————————————————————————————– – அடியேன்

சிவ சேகர் – 9884532288

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

www.shivaperuman.com

இது வரை நடைபெற்ற உழவாரப்பணிகள்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம்

41வது உழவாரப்பணி – அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில்

41வது உழவாரப்பணி – அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில்

41வது உழவாரப் பணி அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் கிராமம்அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவில்இது வரை நடைபெற்ற உழவாரப்பணிகள் சிவபெருமான்...

கைலாசநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம்

கைலாசநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம்

40வது உழவாரப் பணி அருள்தரும் திரிபுரசுந்தரி உடனாய  அருள்மிகு கைலாசநாதர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த அடையாளச்சேரி கிராமம்அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அடையாளச்சேரி கிராமம், செங்கல்பட்டு மாவட்டம்.அடையாளச்சேரி...

39வது உழவாரப்பணி – கலியுக கவலை நீக்கம் கலிங்கநாதீஸ்வர் திருக்கோயில் – இருளஞ்சேரி

39வது உழவாரப்பணி – கலியுக கவலை நீக்கம் கலிங்கநாதீஸ்வர் திருக்கோயில் – இருளஞ்சேரி

39வது உழவாரப் பணி அருள்மிகு தாயினும் நல்லாள் உடனாய கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில் இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.அருள்தரும் தாயினும் நல்லாள் உடனாய அருள்மிகு கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில் இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.கலியுக கவலை நீக்கும்...

38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்

38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்

திரு விற்கோலம் (கூவம்)  தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.  சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக...

36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்

36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 36வது உழவாரம் - கைலாசநாதேஸ்வரர் - செட்டிபுண்ணியம்   நாடும் நகரமும், நற்றிருக் கோயிலும், தேடித் திரிந்து, சிவபெருமான் என்று, பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின், கூடிய, நெஞ்சத்தைக், கோயிலாக் கொள்வனே.   திருச்சிற்றம்பலம் நமது சிவபெருமான்...

34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்

34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 07.05.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் 34-வது உழவாரப்பணி செய்ய திருவருள்...

33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023

33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 02.04.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருகோவிலில் 33-வது...

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர்.  நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி "சென்னை...

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...

உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.     சமணர்களின்...

Tenth

Tenth

சிவ சிவ திருச்சிற்றம்பலம் அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி உடனுறை குகை ஈஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பில்லாத நிலையில் உள்ளது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்...

படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்

படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் அண்ணாமலையார் அரப்பணி குழுவினின் அரும்பணி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்த படூர் ஒரு சிறிய கிராமம். அருகிலுள்ள ஓசூர், அமுதூர், புன்னை மற்றும் மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் செய்த உழவாரப்பணிகளைப்...

பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும்  அருள்மிகு பரமானந்தவல்லி உடனுறை பட்டமுடீஸ்வரர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிச்சிவாக்கம் கிராமம்

பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும்  அருள்மிகு பரமானந்தவல்லி உடனுறை பட்டமுடீஸ்வரர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிச்சிவாக்கம் கிராமம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் பகைவார்களாலும் போர்களினாலும் பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தான். சிறந்த சிவனடியரான மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் தான் இருக்கும் இடத்தினை அடையாளம் காட்டி, அங்கே தனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபாடுமாறு...