0162 – விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
திருக்குறள் | 0162 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அழுக்காறாமை |
குறள் | விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். |
மு.வ உரை | யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |