0249 – தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

திருக்குறள் 0249
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அருளுடைமை
குறள் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
மு.வ உரை அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]