0190 – ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
திருக்குறள் | 0190 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புறங்கூறாமை |
குறள் | ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. |
மு.வ உரை | அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |