0209 – தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
திருக்குறள் | 0209 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் | தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். |
மு.வ உரை | ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |