0274 – தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

திருக்குறள் 0274
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கூடாவொழுக்கம்
குறள் தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
மு.வ உரை தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]