0118 – சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
திருக்குறள் | 0118 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் | சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. |
மு.வ உரை | முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |