0279 – கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

திருக்குறள் 0279
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கூடாவொழுக்கம்
குறள் கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
மு.வ உரை நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]