0293 – தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

திருக்குறள் 0293
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வாய்மை
குறள் தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
மு.வ உரை ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]