0013 – விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
திருக்குறள் | 0013 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. |
மு.வ உரை | மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |