0476 – நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
திருக்குறள் | 0476 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். |
மு.வ உரை | ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |